பாடல் #1121: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
ஓதிய வண்ணங் கலையி னுயர்கலை
ஆதியில் வேதமே யாமென் றறிகிலர்
சாதியும் பேதமுந் தத்துவ மாய்நிற்பள்
ஆதியென் றோதின ளாவின் கிழத்தியே.
விளக்கம்:
இறைவனை அடைவதற்கு உலகத்தோர் கற்றுக்கொள்கின்ற அனைத்து கல்விகளுக்கும் மேலான கல்வியாக ஆதியிலிருந்தே இருக்கின்ற வேதங்களாக இறைவியே இருப்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர். சாதி, மதம், இனம், குலம் என்கிற பலவிதமான பிரிவினைகளாக பிரிந்து இருக்கும் அனைத்திற்கும் தத்துவமாகவும் அவளே இருக்கின்றாள் என்பதையும் அவளே அனைத்திற்கும் முதல்வியானவள் என்பதையும் ஆன்மாக்களின் தலைவியாகிய இறைவியே எமக்கு ஓதி அருளினாள்.
![](https://i0.wp.com/www.kvnthirumoolar.com/wp-content/uploads/2021/04/1-5.jpg?resize=564%2C784&ssl=1)