பாடல் #1090

பாடல் #1090: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உரைத்த நவசத்தி யொன்று முடிய
நிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப்
பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

விளக்கம்:

பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி வயிரவி செய்யும் 12 கலைகளை (பாடல் #1075 இல் உள்ளபடி) எண்ணத்தில் வைத்து தியானித்து வயிரவி இருக்கும் திருக்கோலத்தை தமக்குள் தரிசிக்கும் முன்பே அதை எவ்வாறு செய்ய வேண்டும் அதற்கான வழி முறைகள் என்னென்ன என்பதை குருவாக இருந்து இறைவனே கொடுத்து அருளினார்.

கருத்து: வயிரவி செய்யும் பன்னிரண்டு செயல்களை எண்ணி தியானித்தால் வயிரவியின் திருக்கோலத்தை தரிசிக்கும் வழியை இறைவனே குருவாக வந்து அருளுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.