பாடல் #1077

பாடல் #1077: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆகின்ற மூவரு மங்கே யடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோருக்கே.

விளக்கம்:

பாடல் #1076 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாகி நிற்கின்ற வயிரவி மந்திரத்தில் பிரம்மன் விஷ்ணு உருத்திரன் ஆகிய மூன்று தேவர்களும் அடங்கி இருக்கின்றனர். முக்தி எனும் பெரும்பயன் பெறுவதற்கு மூன்று தேவர்களும் அடங்கி இருக்கும் வயிரவி மந்திரத்தை பஞ்சபூதங்களால் ஆன அழியக்கூடிய உலகத்தைச் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை முறையை விரும்பாமல் சாதகம் செய்கின்ற சாதகர்களாகவும் அவர்கள் செய்கின்ற சாதகமாகவும் செய்யப்படுகின்ற நோக்கமாகவும் இருந்து புண்ணியத்தை வயிரவி அருளுகின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.