பாடல் #1106

பாடல் #1106: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

நாடிகண் மூன்று ணடுவெழ ஞாளத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி யுறங்குகின் றேனே.

விளக்கம்:

பாடல் #1105 இல் உள்ளபடி எமது உள்ளத்தையே விரும்பி வீற்றிருக்கின்ற வயிரவியானவள் எமது உடலுக்குள் இருக்கும் இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று விதமான நாடிகளில் நடுவில் உயர்ந்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்தில் இருந்து தமது கால்களில் தண்டையை அணிந்து கொண்டு இருக்கும் இறைவனோடு சேர்ந்து நன்மைகளின் மொத்த உருவமாக இருக்கும் இறைவியும் தனது திருவடிகளில் தூய்மையான பொன்னாலான சிலம்புகளை அணிந்து கொண்டு ஆடிக்கொண்டே மேலேழுந்து வருகின்றாள். இவர்கள் இருவரின் ஆடலில் இருந்து வரும் ஓசை எமக்குள் முழுவதும் பரவி ஒலிக்க அதிலேயே லயித்து இருக்கின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.