பாடல் #1095

பாடல் #1095: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பேசிய மந்திர மிகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராண னுபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

விளக்கம்:

பாடல் #1092 இல் உள்ள சிதாகாய மந்திரத்தை எப்படி செபிப்பது என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1094 இல் உள்ளபடி செபித்த சிதாகாய மந்திரத்தில் ‘இ’ என்ற எழுத்தை நீக்கிவிட்டு ‘ச’ எழுத்தை முன்னே வைத்து ‘சம்’ எனும் மந்திரத்தை இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் உச்சரித்து மூச்சுக்காற்று உபதேசித்த (பாடல் #1092 இல் உள்ளபடி) வயிரவி மந்திரத்தை பிரகாசமான ஒளிக்கீற்றுக்களை உடைய குண்டலினி (பாடல் #860 இல் காண்க) அக்னியோடு சேர்த்து உரக்க (சத்தமாக) செபியுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.