பாடல் #1114

பாடல் #1114: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதி யகாரண காரணி
சோதி யசோதி சுகம்பர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதியென் னுள்ளத்து உடனியைந் தாளே.

விளக்கம்:

பாடல் #1113 இல் உள்ளபடி ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும், தனக்கு என்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும், ஒளியாகவும் இருளாகவும், பேரின்பத்தை வழங்கும் அழகான இறைவியாகவும், துவாதசாந்த வெளியிலே சமாதி நிலையில் இறைவனுடன் சேர்ந்து மங்கையாக வீற்றிருந்து என்றும் நன்மையையே உடையவளாகவும் இருக்கின்றாள் என்பதை யாம் எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றோம். அவளும் எமது உள்ளத்திற்குள் எம்மோடு சேர்ந்து இருந்து அனைத்தையும் எம்மை செய்வித்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.