பாடல் #1094

பாடல் #1094: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப்
பொருந்தி யணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புகப் பேசே.

விளக்கம்:

பாடல் #1093 இல் உள்ள நேத்திர முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1093 இல் உள்ளபடி உயிர் பயம் மற்றும் உலகப்பற்று என்ற இரண்டு விதமான பிறவித் துன்பங்களையும் போக்கக்கூடிய நேத்திர முத்திரையை செய்ய முதலில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்து அதன் பிறகு சுட்டு விரலையும் நடுவிரலையும் நீட்டிப் பிடித்து இரண்டு விரல் சேர்க்கைக்கும் நடுவில் கட்டை விரலை நுழைத்து மற்ற நான்கு விரல்களையும் மடக்கிப் பிடித்து சிதாகாய மந்திரத்தை செபியுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.