பாடல் #1113

பாடல் #1113: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

விளக்கம்:

பாடல் #1112 இல் உள்ளபடி எமக்குள் வீற்றிருந்த வயிரவி தேவியானவள் அழகிய ஆபரணங்களை சூடிய மங்கையாக எமது உள்ளம் முழுவதும் பரவி சகஸ்ரதளத்திலும் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமது தலைக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிந்தவள் அங்கிருந்து நான்கு விரற்கடை அளவு தூரத்தில் தலைக்கு மேலே உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூவிதழில் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமக்குள் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்த மூச்சுக்காற்றை சீராக்கி எமது முதுகுத் தண்டில் இருக்கும் சுழுமுனை நாடியோடு ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்து எம்மை அருமையான தவங்களை செய்ய வைத்து அருளினாள் ஆதிப் பரம்பொருளாகிய இறைவி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.