பாடல் #1076

பாடல் #1076: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமு மாதியு மாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1075 இல் உள்ளபடி பதினான்கு கலைகளாகவும் இருக்கின்ற வயிரவியானவள் தான் செய்கின்ற செயல்களில் முதல் நடு கடைசி என்ற மூன்று நிலைகளிலும் பதினான்கு விதமான செயல்களையும் செய்து கொண்டு கடைசியான செயலையே முதலாகவும் ஆரம்பித்து எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றாள். இவளின் மந்திரத்தை செபிக்கும் சாதகர்களின் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டு எழும்பும் மாபெரும் சக்தியாகவும் அச்சக்தியில் ஆதியாகவும் அந்தமாகவும் நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.