பாடல் #1093

பாடல் #1093: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப்
பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலு மாமே.

விளக்கம்:

பாடல் #1092 இல் உள்ளபடி தலை உச்சியில் கேட்ட சிதாகாய மந்திரத்தின் மூலம் உயிர்கள் ஆதியிலிருந்தே தங்களின் ஆன்மாவோடு தொடர்ந்து வந்து இறைவனை அடைய விடாமல் அவர்களின் உடலைச் சுற்றி கவசம் போல தடுத்துக் கொண்டு இருக்கும் உயிர் பயத்தையும் உலகப் பற்றையும் மாற்றி அமைக்க அந்த மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானித்து வந்தால் அந்தப் பயத்தையும் பற்றையும் சூலம் அழித்து இனி பிறவி இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.

கருத்து: இறைவனை அடைய விடாமல் உயிர்களைச் சுற்றி கவசமாக இருக்கும் உயிர் பயம் உலகப் பற்று ஆகிய எதிர்மறை எண்ணங்களை வயிரவியின் சிதாகாய மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானிப்பதின் மூலம் இறைவனை அடையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றி அமைத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.