பாடல் #688

பாடல் #688: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

விளக்கம்:

பாடல் #687 இல் உள்ளபடி உணர்ந்த உண்மைப் பொருளான சதாசிவம் எது என்று பார்த்தால் நல்ல வசித்துவம் எனும் சித்தியாகும். அவ்வாறு வசித்துவம் எனும் சித்தியை அடைந்தவர்கள் தன்னுடைய உயிர் எது என்று உணர்ந்தது போல எல்லா உயிர்களையும் உணர்ந்து தாமே சிவமாகி அந்த உயிர்களோடு கலந்து இருப்பார்கள்.

கருத்து: வசித்துவம் எனும் சித்தி பெற்றவர்கள் சிவ தன்மையை அடைந்து அனைத்து உயிர்களோடும் கலந்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.