பாடல் #682

பாடல் #682: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாய மேவலு மாமே.

விளக்கம்:

இறை சக்தியை நமக்குள்ளே உணர்ந்து அதனோடு ஒரு ஆண்டு மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றியிருந்தால் நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் விலகிவிடும். அவ்வாறு விலகியபின் எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் பிராகாமியம் என்னும் சித்தி கிடைக்கும்.

கருத்து: இறை சக்தியோடு ஒரு ஆண்டு ஒன்றியிருந்தால் உலகத் தத்துவங்களிலிருந்து விலகி பிராகாமியம் எனும் சித்தியை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.