பாடல் #690

பாடல் #690: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

விளக்கம்:

பாடல் #689 இல் உள்ளபடி சதாசிவத்தின் சக்தியைத் தரிசித்தபின் அச்சக்த்தியைத் தனக்குள்ளேயே உணர்ந்து அதிலேயே மனதை வைத்து ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் ஏற்கனவே பெற்ற வசித்துவ சித்தியின் மூலம் எல்லா உலகங்களுக்கும் தன் விருப்பம் போல சென்று வருவது மட்டுமின்றி அவ்வுலகங்களில் இருக்கும் எல்லா உயிர்களோடும் கலந்து அந்த உயிர்களை தன்வசம் ஈர்க்கவும் முடியும்.

கருத்து: சதாசிவ சக்தியை ஒரு வருடம் தியானம் செய்தால் எல்லா உலகங்களிலுள்ள உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.