பாடல் #683

பாடல் #683: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.

விளக்கம்:

எதையும் நமக்கு உணரவைக்கும் சிவத்தின் ஒளி நமது புருவ மத்தியில் ஆக்ஞா ஒளியாக இருப்பதை யாரும் அறியவில்லை. மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளிமயமாக பார்க்க முடிந்தவர்களுக்கு ஜோதியாய் இருக்கும் சதாசிவத்தை தரிசிப்பதும் அதன் மூலம் முக்தியை அடைவதும் எளிதாகும்.

கருத்து: மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை சகஸ்ரதளத்திற்கு கொண்டு செல்ல முடிந்தவர்களுக்கு ஜோதி தரிசனமும் முக்தியும் எளிதாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.