பாடல் #681

பாடல் #681: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

விளக்கம்:

கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலங்கள் அழிவது இல்லை. காலங்கள் புதிதாக வருவதும் இல்லை. இறப்பு இல்லை. ஆகவே பிறப்பும் இல்லை. அவர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் தனக்குள் இருக்கும் ஒளியுடனே லயித்து எவற்றாலும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

கருத்து: கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலத்தினால் பாதிப்புகள் வருவது இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.