பாடல் #686: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே.
விளக்கம்:
ஈசத்துவம் பெற்றவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்பட்டுச் செய்யக்கூடியவர் ஆவார். அவ்வாறு முத்தொழில்களைச் செய்வதால் சதாசிவத்தின் தன்மையைப் பெறுவார்.
கருத்து: ஈசத்துவம் சித்தியைப் பெற்றவர் சதாசிவத்தின் தன்மையைப் பெற்று முத்தொழில்களை செய்யக்கூடியவர் ஆவார்.
