பாடல் #1116

பாடல் #1116: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முக்தி யருளு முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமு முன்னுள்ள தாமே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து அடைவதற்காக வழங்கப்பட்ட பிறவியை அவனைப் பற்றி எண்ணாமல் வீணாக பல பேச்சுகளை பேசிக் கழிக்கின்றனர் மூடத்தனமான உயிர்கள். இவர்கள் தம்மை நாடி சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முக்தியை அருளும் ஆதியான இறைவியை அறிந்து கொள்வதில்லை. அவளை அடைய முயன்று சாதகம் செய்யும் அடியவர்களுக்கு முன்பு அவள் முட்டையிட்டு அதைப் பார்வையிலேயே பார்த்து பொரிக்க வைக்கும் மீன்களைப் போல அடியவர்களை எப்போதும் கருணையோடு பார்த்துக் கொண்டே இருக்கும் ஞானக் கண்களோடும் அடியவர்களை தம்மிடம் வந்து சேரும்படி மீண்டும் மீண்டும் அழைக்கின்ற சிவந்த வாயோடும் அடியவர்களின் மேல் கருணையோடு பார்வையை வீசும் திருமுகத்தோடும் எதிர்வந்து அருள்புரிவாள்.

One thought on “பாடல் #1116

Leave a Reply to M.KalyanaramanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.