பாடல் #159

பாடல் #159: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்தது கிடந்தது மேலறி யோமே.

விளக்கம்:

ஐம்புலன்களும் செயல்படும் தலையாய ஐந்து இந்திரியங்களும் (கண், காது, மூக்கு, வாய், தோல்) நாடிகளோடு பினைந்துக் கிடக்கும் ஆறு ஆதாரங்களும் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) முப்பது எலும்புகளும் அந்த எலும்புகளை இணைக்கும் பதினெட்டு மூட்டுக்களும் இவை அனைத்தையும் போர்வை போல மூடி வைத்திருக்கும் தோலும் அந்தத் தோலிலுள்ள ஒன்பது துவாரங்களும் (2 கண், 2 காது, 2 நாசி, வாய், பால்குறி, ஆசனவாய்) பதினைந்துவித எலும்புவரிகளும் (மண்டையெலும்பு, தாடையெலும்பு, கழுத்தெலும்பு, மார்பெலும்பு, முதுகெலும்பு, முதலியன) ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் இந்த மனித உடலானது இறந்தபின் சுடுகாட்டில் கொண்டுபோய் எரிக்கப்படும்போது அனைத்தும் எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே கிடக்கும். அப்படி வெந்து கிடக்கும் சாம்பலுக்குப் பிறகு அந்த உயிருக்கு என்னவாகின்றது என்பதை யாரும் அறிவதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.