பாடல் #145

பாடல் #145: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்:

உயிர் உடலில் இருக்கும் வரை அவனுடன் வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர் சுற்றத்தார் ஊரார்கள் என்று அனைவருமே அவன் இறந்துபோன பின் ஒன்றாகக் கூடி சத்தம்போட்டு அழுது புலம்பிவிட்டு அவனுக்கு அதுவரை வைத்திருந்த பேரைச் சொல்லிக் கூப்பிடாமல் பிணம் என்று ஒரு பேரை வைத்துவிட்டு அனைவரும் சேர்ந்து அவனுடைய உடலை எடுத்துச்சென்று ஊருக்கு வெளியில் இருக்கும் சூரைப்புற்கள் நிறைந்த சுடுகாட்டில் வைத்து அதை எரித்துவிட்டு அந்த உடலைத் தொட்டதை தீட்டு என்று சொல்லி அதைப் போக்க ஆற்றினில் மூழ்கி எழுந்தபின் மெல்ல மெல்ல அவனைப் பற்றிய நினைவுகளையும் மறந்து போவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.