பாடல் #146

பாடல் #146: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

காலும் இரண்டு முகட்டல கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளவும் புகஅறி யாதே.

விளக்கம்:

மனிதர்களின் இரண்டு கால்களே சுவர்களாகவும் முதுகுத் தண்டே அந்தச் சுவற்றிற்கு நடுவில் கூரையைத் தாங்கியிருக்கும் உத்திரமாகவும் உடலைச் சுற்றியிருக்கும் முப்பத்தி இரண்டு விலா எலும்புகளே சுவற்றைச் சுற்றி அது விழுந்துவிடாமல் இருக்கவேண்டி வைக்கப்பட்ட சட்டங்களாகவும் தலையே உத்திரத்தின் உச்சியிலிருக்கும் கூரையாகவும் இருக்கும் இந்த உடலாகிய வீடு எப்படி வீட்டின் மேலே இருக்கும் கூரை பிரிந்து விட்டால் வெறும் சுவர்களும் அதைத் தாங்கியிருக்கும் சட்டங்களும் மட்டுமே நிற்க உபயோகிக்க முடியாததாக ஒரு வீடு இருக்குமோ அதுபோலவே தலைவழியே மூச்சுக்காற்று வெளியேறி விட்டால் உடலும் இறந்துபோய் வெறும் சதையும் எலும்புகளும் மட்டுமே நிற்க வெளியில் சென்ற உயிர் மீண்டும் அந்த உடலுக்கும் புகுந்துகொள்ளும் வழி என்னவென்று தெரியாமல் நிற்கும். உயிராகிய ஆன்மா உடம்பிலிருந்து பிரிந்தால் உடல் மீண்டும் உயிர்பெறுவது இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.