பாடல் #164

பாடல் #164: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

விளக்கம்:

விளக்கு (மனித உடல்) இருக்கும் போதே அதிலிருக்கும் ஒளியை (உயிர்) எடுத்துக் கொண்டான் (எமன்) என்று கதறுபவர்கள் எண்ணெய் (கர்ம வினைகள்) தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியும் (உயிர்) நின்றுவிட்டது என்பதை அறியாத மூடர்கள். தினமும் விடியும் காலைப் பொழுது (பிறப்பு) பிறகு இரவு வர மறைந்து இருளாகும் (இறப்பு) என்பதை உணராத இந்த உலகத்தவர்கள் இறந்தவனுக்காக துக்கத்தில் புலம்புகின்றனர். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல் உலகப் பற்றுக்களில் ஆசை வைத்து நிலையற்ற உடம்பை நிலையென்று எண்ணி வருந்துகின்றனரே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.