பாடல் #142

பாடல் #142: முதல் தந்திரம் – 1. உபதேசம்

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

விளக்கம்:

குருநாதர் கொடுத்த புண்ணியமான போதனைகளைத் தமது எண்ணத்தில் வைத்து அவற்றின் பொருளுணர்ந்து தமக்குள் தெளிவு பெற்றவர்கள் தாம் பெற்ற பிறவியின் புண்ணியத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். அப்படி புண்ணியம் பெற்றவர்கள் குருவின் திருவருளால் இறைவனின் திருநடனத்தைத் தமக்குள்ளே தரிசித்து பேரின்பம் கூடிவர வேதங்கள் துதிக்க விண்ணுலகத்திற்குச் சென்று இறைவனின் திருவடியைச் சேருவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.