பாடல் #132

பாடல் #132: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாய் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

விளக்கம்:

பாடல் 131 ல் உள்ளபடி சிவ சக்தியின் திருநடனத்தைத் தம்முள்ளே கண்ட சிவயோகியர் இந்த உலகத்திலிருந்து என்றும் பிரிந்துவிடாத (இறவாத) பெரும் வழியையும் இந்த உலகத்தில் மீண்டும் பிறக்காத (இறப்பில்லையேல் மீண்டும் பிறப்பும் இல்லை) பெரும் பயனையும் தில்லை பொன்னம்பலத்தில் தாம் தரிசித்த சிவசக்தியர் தம்மை என்றும் பிரியாமல் அவர்களுடனே பேரானந்தத்தில் என்றும் நிலைத்து இருக்கும் பெரும் பேறும் பேரானந்தத்தில் நிலைத்திருக்கும் நிலையில் உலகோடு எந்த செயலும் கொள்ளாமல் தனித்து தமக்குள்ளே தியானித்து இருக்கும் பெருமையும் ஆகிய அனைத்தையும் பெற்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.