பாடல் #138

பாடல் #138: முதல் தந்திரம் – 1. உபதேசம்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

விளக்கம்:

பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை உணர்ந்து கொண்டால் இறைவனின் திருவடியே சிவமாக இருக்கும். இறைவன் இருக்கும் சிவலோகம் எது என்று சிந்தித்தால் இறைவனின் திருவடிகளே சிவலோகமாக இருக்கின்றது. உயிர்கள் சென்று சேருகின்ற இடம் எது என்று சொன்னால் இறைவனின் திருவடிகளே சென்று சேரும் இடமாக இருக்கின்றது. தாமக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து தெளிபவர்களுக்கு இறைவனின் திருவடிகளே அவர்கள் எப்போதும் சென்று தஞ்சமடையும் இடமாக இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.