பாடல் #131

பாடல் #131: முதல் தந்திரம் – 1. உபதேசம்

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே.

விளக்கம்:

பாடல் #130ல் உள்ளபடி பேரொளியாய் இருக்கும் மாணிக்கத்தின் (சிவன் – செந்நிறம்) உள்ளிருந்து மரகதஜோதியாய் (சக்தி – பச்சை) சக்தியே சிவனுக்கு திருமேனியாக இருவரும் இணைந்து தில்லையின் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனத்தைத் தம்முள் தரிசித்த சிவயோகியர் என்ன பேறு பெற்றார்களோ என்று வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு பெரிய பேறு பெற்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.