பாடல் #103

பாடல் #103: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அறியயற் காமே.

விளக்கம்:

உயிர்கள் ஆரம்பத்தில் எப்போதுமே இளமையாகவே இருப்போம் அது அளவில்லாதது என்று கருதிக்கொள்வது இளமையின் தன்மை. அந்த இளமையின் முடிவாகத் தோன்றுவது முதுமையின் தன்மை. அந்த முதுமைக்குப் பின் வாழ்க்கையின் முடிவாக வருவது இறப்பின் தன்மை. பிறக்கும் முன்பே வரையறுக்கப்பட்டு பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை ஆகிய நான்கு தன்மைகளும் இயல்பிலேயே மாயையால் உருவாக்கப்பட்டன என்பதை உணர்ந்துகொண்டால் அந்த மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் (அழிப்பவன்) தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் தாம் உணர்ந்த சங்கரனின் தன்மைகளை எடுத்துச் சொன்னால், அது ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.