பாடல் #116

பாடல் #116: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமது வாய்எழும் சூரிய னாமே.

விளக்கம்:

மூங்கிலினுள்ளே இருக்கும் நெருப்பு போல (காய்ந்த மூங்கில்களை ஒன்றோடு ஒன்று உரசினால் வெளிப்படும் நெருப்பு) உயிர்களின் மெய் எனப்படும் உடலாகிய கோயிலினுள்ளே குடி கொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவனாகிய குருநாதன் இறைவன் உலகத் தாயை விடவும் உயிர்களின் மேல் அதிக கருணை கொண்டு அவ்வுயிர்களைப் பற்றியிருக்கும் மும்மலங்களாகிய அழுக்குகளை அகற்ற வேண்டி இருளை விலக்க கடலின் மேலே தோன்றும் சூரியனைப் போல மும்மல இருளை அகற்றும் பேரொளியாக தனது கருணை எனும் மாபெரும் கடலின் மேலே தோன்றும் சூரியன் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.