பாடல் #114

பாடல் #114: முதல் தந்திரம் – 1. உபதேசம்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவழம் பதித்தான் பதியே.

விளக்கம்:

எங்களது ஆன்மாக்களின் மேல் இருந்த மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயைகளை தன் அருட் பார்வையால் அகற்றி எமது ஞானக்கண்ணைத் திறந்தான் குருநாதராக வந்த இறைவன். அவனே எந்தவித மலங்களும் நெருங்க முடியாத மாசு மருவற்ற தனது அருட் பேரொளியைக் காட்டியவன். அவனே மும்மலங்கள் அகற்றியதால் பளிங்கு போல மாறிய எமது ஆன்மாக்களின் மேல் பவழம் போன்ற தனது திருவருளைப் பதித்தான் எமக்குத் தலைவனாக இருப்பவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.