அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1

9-4-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒருவன் பிறக்கும் முன்னதாகவே பிறவி எப்படி என்பதும், ஜாதி, குலம் எப்படி என்பதும், மரண நேரம் எப்போது என்பதும் நிர்ணயம் ஆகக் கண்டால், அகால மரணம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டதா?

மனிதன் பிறக்கும் முன்னதாக செய்து, பாக்கியுள்ள கர்ம நிலையே இப்பிறப்பு ஜன்ம ஜாதகம் ஆகும். சென்ற பிறப்பு கர்ம பாக்கிகள் தீர்க்கும் நிலையில் மரண நிலை குறிக்கப்படுகிறது, ஆனால் அதே நிலையில் மனிதன் இருப்பதில்லை. இந்த ஜன்மத்திலும் கர்மங்கள் சேர்த்துக் கொள்வதும், கழித்துக் கொள்வதும் ஆக இருக்கும் பொழுது, சமயங்களில் நல்காலங்களில், பொதுவாக நல்காலங்கள் செல்லும் நிலையில், அகால மரணம், அதாவது முன்னதாகவே மரணம் கொண்டுள்ளதை காண்கின்றோம். இக்கால கர்ம வினைகள் கணக்கிட இயலும் என்றால், அந்த மரணமும் நிர்ணயம் செய்திட இயலும்.

இதன் பொருள் என்னவென்றால், அதிகமான ஆண்டுகள் கடினங்கள் காண வேண்டும் என்ற நிலை இருந்த போதும், நல்கர்மாக்கள் அதாவது நல்வினைகள் செய்து கொண்டு இருக்க, ஆயுள் நல்ல நிலையில் கடினமின்றி செல்லக்கூடும் என்பதே ஆகும். இதன் வழியாக மறு ஜன்மம் ஒன்று இருந்தால், அப்பிறவியின் பிறக்கும் கால ஜாதகம் ஆனது சிறப்பாகவே அமையக்கூடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.