அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

18-10-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக நிலையில் புத்தர் என்கின்றவரை பின்பற்றுவோர்கள் அம்மதத்திற்கு புத்திசம் என்றும் முகம்மதை பின்பற்றுவோர்கள் முகம்மதியர் என்றும் கிறிஸ்துவை பின்பற்றுவோர்கள் கிறிஸ்துவர் என்றும் அவரவர் மதத்திற்குப் பெயர் சூட்டினார்கள். இவ்விதம் இருக்க பாரதத்தில் இந்து மதம் என்று கூறுகின்றார்கள் இது எப்படி வந்தது?

பொதுவாகப் பலர் தன் மதத் தலைவர்களின் பெயர்களைப் பொருத்தி அம்மதத்திற்குப் பெயரும் அளித்து அதனைப் பின்பற்றுகின்றார்கள். ஆயினும் இதிலிருந்து இந்து மதம் மாறானது. முன்காலத்தில் பின்பற்றும் வழிகள் இருந்தது. இவைகளுக்குப் பெயர்கள் யாரும் சூட்டவில்லை. பிற்காலத்தில் இவை சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்டுள்ளன. மதத்தில் நடக்கும் வழிகள் பல வழிகள் பல தத்துவங்கள் உள்ளது. இவை அனைத்திற்கும் இப்பெயரைச் சூட்டினார்கள். தனிப்பெயர் இதற்கு இல்லை. சனாதன தர்மம் என்று கூறிக்கொண்டால் இதற்குப் பொருள் நல் நெறியில் நடத்தும் வழி என்பதேயாகும். அதாவது மற்றவர்கள் தன் மதத் தலைவர்களின் பெயரைச் சூட்டிப் பின்பற்றினார்கள். இங்கு நம் நாட்டில் இந்து எனக் கூறிக்கொண்டால் அவர்களில் பல ரிஷிகள் ஞானிகள் வரிசையாகத் தோன்றி இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்கள் பெயரில் இம்மதம் செயல்படவில்லை. தத்துவங்களின் அடிப்படையில் இந்து மதம் நடக்கின்றது இங்குத் தனி நபருக்கு இடமில்லை ஏனெனில் தர்மங்கள் பொதுவானது. இந்து மதம் எனக் கூறிக்கொண்டால் இங்கே ஆன்மீகத் தத்துவங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்தத்துவங்களை எடுத்துரைப்பவர்களுக்கு அல்ல. ஏனெனில் எடுத்துரைப்போர் மாள்வார்கள் (இறந்து போவார்கள்) அவர்கள் கூறியது தொடர்ந்து நிற்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.