பாடல் #141

பாடல் #141: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

விளக்கம்:

குருவின் அருளினால் தமது அனைத்து மலங்களும் நீங்கிச் சென்று சந்திப்பது இறைவனின் திருவடிகளே ஆகும். எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும். உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும். நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

One thought on “பாடல் #141

Leave a Reply to SathaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.