பாடல் #120

பாடல் #120: முதல் தந்திரம் – 1. உபதேசம்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.

விளக்கம்:

பசுவன் பாலில் கலந்து இருக்கும் நீரை அகற்றி வெறும் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல உயிர்கள் தினமும் தங்களின் பலவித காரணங்களால் சேர்த்துக்கொள்ளும் தீவினைகளாகிய அழுக்கை சுத்தமான அவர்களின் ஆன்மாவிலிருந்து அகற்றி அந்தத் தீவினைகளால் அவர்கள் எடுக்கும் ஏழுவித பிறப்புகளுக்கு வித்தாகிய வினைகளை எரித்து உயிர்களைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளவே தில்லை அம்பலத்தில் இறைவன் எப்போதும் தனியாகத் திருநடனம் புரிகின்றான்.

One thought on “பாடல் #120

  1. மு.தாமோதரன் Reply

    மிக்க நன்றி ….
    தங்கள் சேவையில் விளக்கம் பெற்றேன்

Leave a Reply to மு.தாமோதரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.