பாடல் #134

பாடல் #134: முதல் தந்திரம் – 1. உபதேசம்

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

விளக்கம்:

புரை ஊற்றப்படாத சுத்தமான பாலுக்குள்ளே நெய் கலந்து இருப்பது போலவே கடல் அலைகள் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும் சிந்தனைகளுக்குள்ளே ஞானகுரு சொன்ன மந்திரத்தை ஜெபித்து இறைவனின் மேல் மனம் ஒருநிலைப்பட்டு இருப்பதை உணர்ந்தவர்கள் தாம் பிறந்த இந்த உடலை விட்டுவிட்டு சூட்சும ஒளியாகி எல்லையில்லாத பேரொளியாகிய இறைவனோடு கலந்து சுத்தமான பரவெளியில் என்றுமே நிலைத்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.