பாடல் #123

பாடல் #123: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.

விளக்கம்:

அண்டங்கள் அனைத்தும் சிவமாகவே இருக்கும் உண்மையையும் தேவர்களும் அமரர்களும் அறியாத பேரின்ப உலகையும் உயிர்கள் உய்வதற்கென்று தில்லை அம்பலத்தில் ஆடும் தம் திருவடிகளையும் பேரின்பம் சூழ்ந்த அருள்வெளியாகிய பரவெளியையும் இறைவன் தன் பெருங்கருணையால் உயிர்களுக்கு அளித்து அருளினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.