பாடல் #121

பாடல் #121: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

விளக்கம்:

உயிர்கள் மறுபடியும் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் வினைகளை அழித்து அருள குருநாதராக வந்த இறைவன் உபதேசித்த பேரறிவு ஞானம் மிகவும் வாய்க்கப் பெற்று அந்தப் பேரறிவு ஞானத்தின் மூலம் மல மாசு இல்லாத சுத்தமான ஆன்மாவாகப் பிறந்து உலகப் பற்றுக்களை உதறிவிட்டு ஐம்புலன்களைக் கொண்ட உயிரும் உடலும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போதே இறந்து போன உடலைப் போல அசைவற்று எப்போதும் இறைவனின் நினைப்பிலேயே இருப்பவர்கள் சிவயோகியர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.