பாடல் #122

பாடல் #122: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாரா தவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே.

விளக்கம்:

சிவயோகியர்கள் செய்யும் சிவயோகம் என்பது என்னவென்றால் சித்து (உயிர்) அசித்து (உடல்) ஆகிய இரண்டும் தனக்குள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தவம் புரியும் யோக வழியில் தானும் தனக்குள் இருக்கும் இறைவனும் ஒன்றாகச் சேரும்படி தியானித்து பிறப்பு இறப்புகளுக்குக் காரணமாகிய உலக வழிகளில் செல்லாமல் உயிர்களின் தலைவனாகிய இறைவனின் திருவடிகளை நாடிச்சென்று அடைதல் ஆகும். பிறவியின் பெரும் பயனைத் தரும் இந்தச் சிவயோக நிலையை உயிர்களுக்கு அளித்து குருநாதராக வந்த இறைவன் பெரும் கருணை செய்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.