பாடல் #119

பாடல் #119: முதல் தந்திரம் – 1. உபதேசம்

அறிவைம் புலனுட னேநான்ற தாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போல
குறியறி விப்பான் குருபர னாமே.

விளக்கம்:

உயிர்களின் சிற்றறிவு அவர்களின் ஐந்து பொறிகளின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியே கிடைத்து உணர்வுகளிலிலேயே (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) லயித்திருந்து பேரறிவை அறியாமல் அழிந்து போகின்றது. ஆற்றின் ஆழம் தெரியாமல் நீரில் இறங்கி மூழ்கியவர்கள் போல உயிர்களும் உலக இன்பங்களில் மூழ்கி தங்களின் பிறவியைக் கடத்துகிறார்கள். இவர்களின் சிற்றறிவுக்குள்ளே பேரறிவு ஞானம் இருப்பதையும் அதை அறிந்தால் உண்மைப் பொருளை உணர்ந்து பந்த பாச உலகப் பிணைப்புகளை அறுத்து இறைவனை அடைய முடியும் என்பதையும் பரம்பொருள் இறைவன் குருவாக வந்து குறிப்பில் உணர்த்துவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.