பாடல் #126

பாடல் #126: முதல் தந்திரம் – 1. உபதேசம்

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.

விளக்கம்:

பாடல் #125 ல் கூறிய முப்பத்தாறு தத்துவங்களையும் முக்தி பெறுவதற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளைப் போல ஒவ்வொன்றாக இறையருளால் அறிந்து கொண்டு அதன் பயனாய் ஈடு இணையில்லாத பேரானந்தத்தை வழங்கும் பேரொளியை தமக்குள்ளே கண்டு வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத சிவத்தைத் தமக்குள்ளே தரிசித்து தாம்தான் சிவம் என்பதை உணர்ந்து தெளிந்தவர்களாக இறைவன் வழங்கிய இந்தப் பேரருளே தமது பிறவியின் பெரும் பரிசாக ஏற்றுக்கொண்டு அவன் வழங்கிய பேரானந்த நிலையிலேயே அமர்ந்து இருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.