பாடல் #1152

பாடல் #1152: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவையைப் போதத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.

விளக்கம்:

மென்மையான இசையைப் போல ஒலி வடிவத்தில் இருக்கும் பேரழகுடைய இறைவி அகண்ட பரகாயத்தில் மென்மையான கொடி போல ஒளி வடிவத்தில் பரவி இருக்கின்றாள். பேரழகுடைய இறைவி கூட்டுப் பிரார்த்தனையில் பலவகையாகப் போற்றி வணங்கும் பக்தர்களின் பக்குவத்திற்கு ஏற்ப பயன்களை அருளுகின்ற பசுமையான கொடி போன்றவள். தமது அடியவர்களுக்குள் இருக்கும் பேரழகுடைய மாயையாகிய சக்தியை வெளியேற்றி துரத்திவிட்டு அருளாற்றலில் வல்லமை பொருந்திய பேரழகுடைய இறைவி அவர்களின் மனதிற்குள் புகுந்து அருளோடு வீற்றிருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.