பாடல் #1127

பாடல் #1127: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்
வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி யினிதுறை தையலும்
அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.

விளக்கம்:

பாடல் #1126 இல் உள்ளபடி அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனமாகிய கோலின் மூலம் ஆன்மாவாகிய பாகனைக் கொண்டு அடக்கி ஆளுகின்றான். குற்றம் குறையில்லாமல் பிரகாசிக்கும் நவரத்தினங்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டு பிரகாசிக்கும் ஒளி வண்ணத்தில் திருமேனியை உடைய இறைவனும் அவனோடு பேரின்பத்தில் கலந்து இனிமையாக பின்னிப் பிணைந்து வீற்றிருக்கின்ற இறைவியும் உண்மையான அன்போடு இறைவனை நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து ஒன்றாக வீற்றிருப்பார்கள்.

கருத்து: அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருந்த இறைவன் அவர்களின் ஐந்து புலன்களையும் அவர்களின் மனதால் அடக்கி அவர்களின் ஆன்மாவை அன்பினால் பேரின்பத்தில் பின்னிப் பிணைத்து வீற்றிருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.