பாடல் #1129

பாடல் #1129: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

என்னம்மை யென்னப்ப னென்னுஞ் செருக்கற்று
உன்னம்மை யூழித் தலைவனு மங்குளன்
மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

விளக்கம்:

எமது அம்மையாகவும் அப்பனாகவும் இறைவியும் இறைவனுமே இருக்கின்றார்கள் என்கிற பெருமையான எண்ணங்களை நீக்கிவிட்டு எவர் ஒருவர் இறைவியை நினைத்து தியானிக்கின்றார்களோ அவர்களின் உள்ளுக்குள் தாயாக வந்து வீற்றிருக்கும் இறைவியோடு பேரூழிக்காலத்தின் தலைவனாகிய இறைவனும் வந்து உடன் வீற்றிருக்கின்றான். இறைவியை நினைப்பவர்களின் மனமே இறைவியாகி அவர்களின் உலகம் சார்ந்த மாய சிந்தனைகளை மாற்றி உண்மையை சொல்லி அருளுகின்றாள். பிறகு அந்த அம்மையே இறைவனோடு சேர்ந்து நின்று குருவாக இருந்து வழிகாட்டுகின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.