பாடல் #1143

பாடல் #1143: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நடந்தது அம்மலர் நாலுட னஞ்சாய்
இருந்தனர் கன்னிக ளெட்டுட னொன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

விளக்கம்:

பாடல் #1142 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக இருக்கும் இறைவி அங்கிருந்து வெளிப்பட்டு உலகங்கள் அனைத்தையும் இயங்க வைப்பதற்கு ஒன்பது விதமான அம்சங்களாக வெளிப்படுகிறாள். இந்த அம்சங்கள் எட்டு விதமான தேவியர்களாகவும் இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் அம்சமான மனோன்மணியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது விதமான சக்திகளாக அவரவர்களுக்கு ஏற்ற தனித்தன்மையான வழிகளின் மூலம் ஜோதி வடிவாய் கொடி போல சகஸ்ரதளத்திலிருந்து வெளிப்பட்டு வளர்ந்து சென்று உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்றார்கள். இவர்கள் தத்தமது வழிகளின் மூலம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கான ஆதார சக்தியாக சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதி இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.