பாடல் #1139

பாடல் #1139: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநற் றீபத் தொளியுடன்
ஊறி யிருந்தன ளுள்ளுடை யார்க்கே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்து இருக்கின்ற அமிழ்தமான பாலை வழங்குகின்ற இறைவியை தமக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று அந்த அமிழ்தமான பாலை உண்மை ஞானத்தை தரும் பேரொளியாக மாற்றுகின்ற வழியை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. அந்த வழியை குருவின் உபதேசத்தாலோ அல்லது இறைவியின் அருளாலோ அறிந்து கொண்டு அதன்படியே தமக்குள் ஆராய்ந்து இறைவியை அறிந்து கொண்டு தெளிவு அடைந்தவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவி அமிழ்தப் பாலை உண்மை ஞானத்தையும் பேரின்பத்தையும் கொடுக்கின்ற பேரொளி தீபமாக ஊறிக் கொண்டே இருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.