பாடல் #1151

பாடல் #1151: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை யேன்றேன்
றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1150 இல் உள்ளபடி சாதகர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கின்ற பசுமையான கொடி போன்ற இறைவியைப் பற்றிக் கொண்டவர்களின் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற அமிழ்தத்தை ஊறச் செய்து அருளுகின்ற பேரழகியான இறைவி திரிபுரை சக்தி எனும் வடிவத்தில் என்றும் இளமையுடன் இருக்கின்றாள். பலவிதமான பயத்தைக் கொடுக்கின்ற தீமையான கொடிய வினைகளை அழித்து அருள வேண்டும் என்று இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு சரணடைபவர்களை தாங்கிக் கொண்டு தமது அடியார்களான அவர்களின் தீமையான கொடிய வினைகளை முழுவதுமாக அழித்து அருளுகின்ற ஆதிப் பரம்பொருளாக இறைவி இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.