பாடல் #1137

பாடல் #1137: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

மருவொத்த மங்கையுந் தானு முடனே
உருவொத்து நின்றமை யொன்று முணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

விளக்கம்:

பாடல் #1136 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் இருக்கும் அனைத்து அம்சங்களாகவும் இறைவியே மாறி நிற்பதை உணர்ந்தாலும் தம்முடைய உருவமும் இறைவியாகவே மாறி நிற்பதை உணராமல் இருக்கின்றார்கள். ஆணின் அம்சமும் பெண்ணின் அம்சமும் ஒன்று சேர்ந்து கருவாக உருவாகுவது போலவே இறைவியும் தாமும் ஒன்றாக கலந்து நிற்பதை சாதகர்கள் உணருகின்ற போது இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கும் அவர்களின் சிந்தனைக்குள் இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.