பாடல் #148

பாடல் #148: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

விளக்கம்:

புதியதாகத் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு அறுசுவையோடு உணவு சமைத்து வைத்தார்கள். மாப்பிள்ளையும் அனைத்து உணவையும் நன்றாக சுவைத்து உண்டான். கொடிபோன்ற இடை கொண்ட இளம் மனைவியுடன் சுகமாக குலாவினான். இடது பக்கம் சிறிது வலிக்கின்றது என்றான். மனைவி அவனைத் தன் மடியில் கிடத்திப் படுக்க வைத்து என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே இதய வலியால் உயிர் பிரிந்து இறந்து போனான். உயிர் எந்த அளவு நிலைப்புத் தன்மை இல்லாதது என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு இது. இதை உணர்ந்து என்றும் நிலைத்திருக்கும் இறைவனையே போற்றுவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.