பாடல் #151

பாடல் #151: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

விளக்கம் :

மை பூசிய கண்களுடைய மனைவியும் தேடிய செல்வமும் அருகில் இருக்க மருத்துவர் கையில் நாடி பார்த்து இனி மருத்துவம் பயனளிக்காது என்று கைவிட்டு விட கொடுத்தது வாங்கியது செய்யவேண்டியது அனைத்தையும் மற்றவர்களிடம் சொல்ல எண்ணியும் நினைவுகள் இல்லாமல் தடுமாறி உடலில் ஒட்டிய உயிர் மூச்சு ஒடுங்கிவிடும். வாசம் மிகுந்த நெய்யால் செய்த உணவுகளை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் செயலிலந்து உடலை விட்டு உயிர் பிரிந்து விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.