பாடல் #166

பாடல் #166: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

விளக்கம்:

அரசாட்சியும் வலிமையான குதிரை படையும் உறுதியான வாளும் செங்கோலும் தரித்துக் கொண்டு வாழ வேண்டிய காலம் வரை அரசனாக வாழும் மனிதர்களும் அவர்களின் நடுவே நான்கு பக்கமும் மனிதர்களோடு புடைசூழ சென்று கொண்டிருக்கும் போதே அவர்களது உயிரானது இடகலை பிங்கலை நாசிகளின் வழியே பிரிந்து அடையவேண்டிய இடத்துக்குச் சென்று அடைந்துவிடும்.

உட்கருத்து: மக்கள் படைசூழ வலம் வரும் பாராளும் அரசன் ஆனாலும் உயிர் பிரிந்து போவதை யாராலும் தடுக்க இயலாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.