பாடல் #150

பாடல் #150: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

விளக்கம் :

இனிய உறுதி மொழிகளை கூறி ஆணும் பெண்ணும் இருமனங்களும் ஒன்று சேர திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கூடிக்கலந்து மகிழ்ந்திருந்த மணமக்கள் காலப்போக்கில் ஆரம்பத்தில் இருந்த காதல் பாச நினைவுகளை மறந்து ஒருவர் மேல் ஒருவர் திகட்டி சலிப்படைந்து விடுவர். பின் ஒரு நாள் இருவரில் ஒருவர் இறந்து விட அந்த உடலை பாடையின் மேல் வைத்து ஒப்பாரி வைத்து அழுது புலம்பி தங்களின் அன்பு பாசத்தையும் உடலுடன் சேர்த்து தீ வைத்து பலியிட்டார்களே.

கருத்து : மணந்தவர்களின் அன்பும் சுடுகாடு வரை மட்டுமே இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.