பாடல் #163

பாடல் #163: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினில்
கெட்டது எழுபதிற் கேடறி யீரே.

விளக்கம்:

கரு முட்டையில் (சுரோணிதம்) சுக்கிலம் சேர்ந்ததால் முன்னூறு நாட்களில் (10 மாதம்) பிறந்தது மனித உடல். பிறந்த உயிர் தாமாகவே இறைவனை அறியும் அறிவை கொண்டு வரவில்லை பிறந்ததில் இருந்து இறைவனை அடையும் அறிவுச் செல்வம் இல்லாத அந்த குழந்தை 12 ஆண்டுகளில் உலக வாசனையுடன் வளர்ந்து சிறிது சிறிதாக உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொண்டு அப்பற்றுகளுடன் வாழும் அந்த உயிர் எழுபது வயதில் இறைவனை அடையும் வழிகள் தெரியாமல் மனம் தெளிவை அடையாமலேயே உடல் கெட்டு அழிந்து விடுவதை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.